Posts

Showing posts from December, 2018

18 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும்

Image
இனி அதிகபட்சமாக 18 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மலேசிய எண்ணெய் நிலைய உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ கைருல் அனுவார் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை செலவினங்களைக் குறைப்பதற்கு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இந்ந நடவடிக்கையை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். எண்ணெய் விலை 30 காசு குறைக்கப்பட்டிருப்பதால் ஓர் இரவில் மட்டும் எங்களுக்கு வெ.4.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நட்டத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எண்ணெய் நிலைய கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஆகக் கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டுதான் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் இதுவரை பெட்ரோலுக்கு 19.12 காசும் டீசலுக்கு 7 காசும் கமிஷன் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே கமிஷன் தொகையத்தான் நாங்கள் பெற்று வருகிறோம் என்பதால் அரசு கமிஷன் தொகையை 15 காசாக உயர்த்துவதோடு பெட்ரோல், டீசலுக்கான கமிஷன் தொகையையும் ஒருமுகப்படுத்த வேண்டும்...

13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 72 வயது பெண்! இளைஞர்களை மட்டுமே குறி வைத்தது அம்பலம்

Image
அமெரிக்காவில் 72 வயது பெண் ஒருவர் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் North Carolina நகரத்தின் Raeford பகுதியைச் சேர்ந்தவர் Caroline McGee Pitts. 72 வயது பெண்ணான இவரை பொலிசார் சமீபத்தில் திடீரென்று கைது செயதனர். அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Caroline McGee Pitts இளைஞர்களை மட்டுமே குறி வைத்து அவர்களை தன் விருப்பதிற்கு அடி பணிய வைத்துள்ளார். இப்படி அவர் பல இளைஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், இதில் 13 வயது சிறுவனும் பாதிக்கப்பட்டுள்ளான் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதைத் தவிர பொலிசார் மற்ற விவரங்களை தெரிவிக்கைவில்லை, எனவும் உரிய விசாரணைக்கு பின்னரே முழுத் தகவல் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளி முனி தரிசனம் படம் அடுத்த மாதம் வரும்

Image
Kuala Lumpur - மலேசியாவில் பெரிய பொருள் செலவு செய்து எடுத்தே படம் காளிமுனி தரிசனம். ஒரு சில காரணத்தில் இந்த படம் அடுத்த மாதம் வரும் எதிர்பார்ப்போம் . எப்பொழுது தெய்வம் படம் வருவது குறைவு.ஆனாலும் நல்ல பக்தி படம் கொடுத்தால் மக்கள் நல்ல ஆதரவு கிடைக்கும் தெரிந்து கொண்டார் இன்ட்ரன். ஒரு நல்ல கதை எட்டுது ஒரு சில உண்மை கதை வைத்து பெரிய பொருள் சிலவில் எடுத்த படம் தான் காளிமுனி தரிசனம் .இந்த படம் அடுத்த மாதம் கண்டிப்பா திரைஅரகத்துக்கு வரும் தயாரிப்பாளர் இன்ட்ரன் உறுதி 

கனா திரைப்படத்தை கொண்டாடிய மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

Image
  முகப்பு  >  கலை உலகம்  >  கனா திரைப்படத்தை கொண்டாடிய மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்! கலை உலகம் முதன்மைச் செய்திகள் கனா திரைப்படத்தை கொண்டாடிய மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்! Aegan டிசம்பர் 28, 2018 54 0 கோலாலம்பூர், டிச. 28- இசையமைப்பாளராக இருந்து இயக்குனராகியிருக்கும் அருண்ராஜா காமராஜுக்கும், தயாரிப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் முதல் படம் கனா. இப்படத்தில் கௌசல்யாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் கனாவை நனவாக்க போராடும் பெண்ணாக கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவரது அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ், விவசாயிகளின் பிரச்சனைகளை உணர்வுபூர்வமாக உணர்த்தியுள்ளார். அறிமுக நாயகனாக வலம் வந்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், தர்ஷன். இதற்கு வலுசேர்க்கும் விதமாக நெல்சன் திலிப்குமாராக வலம் வரும் சிவகார்த்திகேயன், ஒரு எனர்ஜி பூஸ்டராக தெரிகிறார். இப்படம் வெளியானது முதல் மலேசியாவில் அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, முக்கியமாக இளைஞர்கள் பலர், தாங்கள் தம் கனவுகளை நோக்கி பயனிக்க இப்படம் ஊக...

'பரிவுமிக்க அரசாங்கம்' எனும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டை பெற்றுள்ளனர்.

Image
சபாக் பெர்ணாம்- மிக மோசமாக சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த கு.லெட்சுமணன் - திருமதி ஜெயா தம்பதியர்  சிலாங்கூர் மாநிலத்தின் அரசின்  'பரிவுமிக்க அரசாங்கம்' எனும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டை பெற்றுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் புதிய வீட்டை பெறுவதற்கு முயற்சி செய்த இவர்களுக்கு சபாக் பெர்ணாம் மாநகர் மன்ற உறுப்பினர் ஹரிகுமார் முயற்சியில்  'பரிவுமிக்க அரசாங்கம்' திட்டத்தின் கீழ் 52,000 வெள்ளி செலவில் புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. சபாக் பெர்ணாம், கம்போங் ராஜாவில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு இக்குடியிருப்பின் சற்று தொலைவில் இந்த புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தம்பதியர் புதிய வீட்டை பெறுவதற்கு பெரும் உதவி புரிந்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஹரி குமார் தெரிவித்தார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சிவராஜ் போட்டியிட முடியாது -தேர்தல் ஆணையம் முடிவு

Image
  முகப்பு  >  அரசியல்  >  கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சிவராஜ் போட்டியிட முடியாது -தேர்தல் ஆணையம் முடிவு அரசியல் முதன்மைச் செய்திகள் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சிவராஜ் போட்டியிட முடியாது -தேர்தல் ஆணையம் முடிவு Lingga டிசம்பர் 28, 2018 92 0 கோலாலம்பூர், டிச 28 கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் சிவராஜ் சந்திரன் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்துள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பில் அங்கு போட்டியிட்ட மனோகரன் தேர்தல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்து இருந்தார். அந்த வழக்கு விசாரணையின் முடிவில் அத்தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் தேர்தல் செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அறிவித்ததோடு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உறுதிப்படுத்தியது. இதன் தொடர்பில் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் சிவராஜ் சந்திரன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் வெள்ளிக்க...

அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படம் ரஷ்யாவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது

Image
அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படம் ரஷ்யாவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். சமீபத்தில் சென்சார் முடிந்து ‘U’ சான்றிதழ் பெற்றுள்ளதால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பொங்கல் பண்டிகைக்கு குடும்பங்களும் கொண்டாட ஆயுத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வியாபாரம் மும்முரமாக நடந்து முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.   விஸ்வாசம் படத்தோடு ரஜினியின் பேட்ட படமும் வெளியாக இருப்பதால் முதலில் தியேட்டர்கள் தட்டுபாடு ஏற்படும் எனவும் திரையரங்கில் முக்கிய திரையை எந்தப்படத்திற்கு ஓதுக்குவது தொடர்பான பிரச்னைகள் எழுந்தாக கூறப்பட்டது. ஆனால் தற்போது விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதால் அத்தகைய இடர்பாடுகள் அனைத்தும் களைப்பட்டுள்ளதாகவும் தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   இந்நிலையில், 7th Sense Cinematics எனும் நிறுவனம் விஸ்வாசம் திரைப்படத்தை ரஷ்யா மற்றும் உக்ரைனில் திரையிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் அஜித் படம் வெளியாவது இதுவே முதல் முறை எனவும் ரஷ்ய...

சிஏபிஎல்ட் கோவில் பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுத்தே தலைவர் சிவராஜா தான்

Image
Kuala Lumpur- சிஏபிஎல்ட் கோவில் பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுத்து மேலும் இந்த பிரச்சனுக்கு நல்ல ஒரு தீர்ப்பு கிடக்கே வேண்டும் மேலும் இந்த கோவில் போராட்டத்தில் கலந்து கொண்டே தமிழருக்கு இலவசமா வழக்கறிஞர் கொடுத்து மக்களை சுமை குறைத்தே தலைவன் டத்தோ சிவராஜா , இது மறுக்க முடியாதே உண்மை . மேலும் தமிழர் பிரச்சனைக்கு தனி மனிதனாய் இருந்து குரல் கொடுத்து உள்ளார், உணமையான தலைவருக்கு வாக்கு அளிப்பது தமிழ் மக்களுக்கு நல்லது ,அப்பொழுதுதான் மக்கள் பிரச்னை ஓர் முடிவுக்கு வரும் .

ம இ கா வெற்றி உறுதி

Image
Cameron Highlands - முடித்த தேர்தல் பின் மக்களுக்கு நம்மிக்கை வந்தது, உண்மையில் யார் மக்களுக்கு உதவிசெய்தார்கள்.இது வரை மக்களுக்கு கொடுத்த வாக்கு தண்ணியில் பொய்யுவிடாது ,ஆனால் டத்தோ சிவராஜா மக்களுக்கு உதவி செய்து உள்ளார் . உண்மையுள்ளே மக்கள் கஷ்டம் தெரித்த தலைவன் தான்   வேண்டும்சிவராஜா தான் நாங்கள் பார்த்தே அருமையான தலைவன்் . எங்கள் வாக்கு சிவராஜாக்கு மட்டும் தான்  உறுதி கொடுத்து உள்ளர்க்கள் . டத்தோ சிவராஜா மேல பொய் செய்தி உருவாக்கிய முட்டாளுக்கு இந்த தேர்தல் ஒரு பாடம் கர்த்துக்கொடுக்கும் .

இந்தியாவிற்கான விசா கட்டணம் குறையவில்லை; வதந்திகளை நம்பாதீர்

Image
கோலாலம்பூர், டிச. 26 இந்தியாவிற்கான விசா கட்டணம் மீண்டும் பழைய நடைமுறைக்கு திரும்பிவிட்டதாக சமூக தளங்களில் செய்திகள் பரவி உள்ளன. ஆனால் இந்த செய்தியில் துளி அளவும் உண்மை இல்லை என்பது இப்போது தெரிய வந்திருக்கின்றது. பிரதமர் மோடி மலேசியர்களுக்கான விசா கட்டணத்தை மீண்டும் 189 வெள்ளிக்கு மாற்றி விட்டதாகக் கூறினார் என்ற செய்தி சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. அதோடு மலேசிய இந்தியர்களின் நலனில் அக்கறைகொண்டு நம்பிக்கை கூட்டணி அரசு வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது எனவும் சிலர் தங்களின் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கான விசா கட்டணம் குறைந்துவிட்டது என தமது முகநூலில் ஒருவர் வெளியிட்ட செய்தியை பலர் பகிர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவும் வேளையில் அந்த செய்தியில் துளி அளவும் உண்மையில்லை என மலேசியாவுக்கான இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே இந்தியாவிற்கான விசா கட்டணம் குறைந்துவிட்டது என்ற செய்தியை அறிந்து சிரம்பானில் விசாவிற்கு விண்ணப்பம் செய்யச் சென்ற ஒரு குடும்பத்தினர் விசா கட்டண முறையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதை அறிந்து அத...

இந்து சங்கம் தேவை இல்லை

Image
Kuala Lumpur - மலேசியாவில் இதற்க்கு அப்போறோம் மலேசியா இந்து சங்கம் விடம் பதிவு செய்ய அவசியம் எல்லை ஈரோஸ் நேரில் பதிவு செய்து கணக்கு நேரில் அரசாங்கம் விடம் கொடுப்பது நல்லது  கோவில் பிரச்சனை எப்படி பேசி முடிவு எடுப்பது தெரியதே மோகன் ஷான் தேவை எல்லை, ஹிந்து சாங்கமும் அவசியம் இல்லை . மலேசியா இந்து சங்கமமும் ஈரோஸ் விடம் தான் பதிவு செய்து உள்ளது . மலேசியா கோவில் அனைத்தும் ஈரோஸ் கீழ் பதிவு செய்யுவது நல்லது அப்போழுது தான் மலேசியாவில் கோவில் பாதியில் அரசாங்கத்துக்கு தெரியும் 

பெண்களைக் குறிவைத்து கொள்ளை! - சில மணி நேரத்தில் கொள்ளையனைப் பிடித்த நெல்லை போலீஸ்

Image
நெல்லை மாநகர் பகுதியில் தொடர்ந்து  வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் கைகளில் உள்ள சிறிய பைகளை மட்டுமே குறிவைத்துக் கொள்ளையடித்த நபரிடம் இருந்து பணம், செல்போன்கள் உள்ளிட்டவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். நெல்லை மாநகரப் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை மட்டுமே குறிவைத்து, இரு சக்கர வாகனத்தில் வரக்கூடிய மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகின. ஒரே நாளில் நெல்லை டவுன், பாளையங்கோட்டை இலந்தகுளம் சாலை, டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெண்களிடம் வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்டனர்.  ஒரே நாளில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள் நெல்லை மாநகரப் பகுதியில் வசிக்கும் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் குற்றப்பிரிவு காவல்துறையினர் கொள்ளையர்களைப் பிடிக்க தீவிரம் காட்டினார்கள். கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சி நடந்தது. அதில் இரு கொள்ளையர்கள் இருசக்கர வ...